Posts

Showing posts from December, 2023

எது வாழ்க்கை

 பெண்களே PHD பண்றீங்களோ இல்லையோ பட்டப்படிப்பு படிக்கிறீங்களோ இல்லையோ இத படிங்க முதல்ல வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்... எங்கள் தோழி... 50 வயதைக் கடந்தவள்.. அவள் பிறந்த நாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி... பேரதிர்ச்சி எங்களுக்கு.. அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்.. பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்... எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை, எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது, நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்... ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று.. அதில் தொனித்த வேதனையை எங்களால் இனம் காண முடிந்...

எதிர்பார்ப்பு இல்லாமல்

 பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி சம்பந்தமாக, மணிவண்ணன் அவர்களை ஓரிருமுறை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்திருக்கிறேன். அது அவர் நகைச்சுவை நடிகராக உச்சத்தில் இருந்த நேரம். ஆனாலும் எந்தவிதமான பந்தாவும் இன்றி பண்போடும் பக்குவத்தோடும் பரிவோடும் வரவேற்று உபசரித்தார். அப்போதே மணிவண்ணன் மீது எனக்கு பிரமிப்பு கலந்த ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. அந்த மரியாதை இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது. அதற்கு காரணம், சமீபத்தில் நான் பார்த்த ஒரு வீடியோ. மணிவண்ணன் சம்பந்தமான ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் அகத்தியன் பேசியது. அதன் சாராம்சம், இதோ: அகத்தியன் சினிமாவில் புகழ் பெறுவதற்கு முன், அவர் எழுதிய ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை இயக்குவது சம்பந்தமாக மணிவண்ணனை நேரில் போய் சந்தித்திருக்கிறார். ஒரு சில தொடர் சந்திப்புகளுக்கு பின் ஒரு சிறிய இடைவெளி. அந்த நேரத்தில் ஊரிலிருந்த அகத்தியனின் தந்தை காலமாகி விட்டார். ஊருக்கு போக அகத்தியன் கையில் காசு இல்லை. தெரிந்த நண்பர்களிடம் 100, 200 என கடன் வாங்கி, இறுதிச் சடங்குக்கு போய்விட்டு, மீண்டும் சென்னைக்கு வந்த அகத்தியனுக்கு ...