Posts

Showing posts from February, 2024

ஆறாமலேயே ஆறிவிட்டது

என் தலையைவிட உயரமானது என் கைத்தடி. அதனை ஊன்றிக்கொண்டு நடந்து சென்றுகொண்டிந்தேன். எனக்கு வேண்டிய அளவு என்னிடம் செல்வம் உள்ளது. பிறருக்கும் அவ்வப்போது உதவி செய்து வந்தேன்.  அன்று என் கையில் பணம் இல்லை. அது வெளியூர். என்னைத் தெரிந்தவர் அங்கு யாரும் இல்லை.  வயிறு கேட்குமா? பசித்தது.  ஒற்றையடிப் பாதை. அந்த வழியில் பலர் சென்றனர். சிலர் திரும்பிக்கொண்டிருந்தனர்.  சோறு, பூசனிக்காய்க் குளம்பு, பறங்கிக்காய்க் கூட்டு, ரசம் நன்றாக இருக்கிறது. மோரில்தான் கொஞ்சம் கூடுதலாகத் தண்ணிர் - என்று ஒருவர் வேறொருவரிடம் சொன்னதைக் கேட்டேன்.  அது அன்னதானம் செய்யும் சத்திரமாம். ஏழை எளியவர்களுக்கு வயிறு நிறையச் சோறு போடுவார்களாம்.  அப்பாடா  பசி தீர்ந்துவிடும்  தெம்பு வந்துவிட்டது  ஏழெட்டு பேர் சென்றோம். அங்குத் தெரிந்த வாசல் வழியே நுழைந்தோம்.  வாயிலில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.  அந்தச் சத்திரத்தில் 20 பேர் வரையில்தான் உட்கார்ந்து சாப்பிட முடியும்.   உள்ளே சாப்பிடுபவர் வெளியில் வந்த பிறகுதான் வெளியில் இருப்பவர்களை உள்ளே அனுப்புவார்கள். இதனை ஒழுங்குப...