Posts

Showing posts from January, 2024

இந்த மாதிரி மக்களுக்கு

 9665737555 ஒரு போலிஸ் நண்பரின் பதிவு…‌ 💜 இரவு 10.15 மணிக்கு பணி முடித்து வீட்டிற்க்கு செல்லும்போது நல்ல மழை ...இராஐகுளம் அருகில் எனக்கு முன்னால் TVS 50 ல் சென்ற ஒரு பெண்மணியை ஓவர்டேக் செய்து சென்று விட்டேன். ஆனால் அவர்கள் பாவம் ...முழுமையாக மழையில் நனைந்து விட்டார்கள்..பின்பக்கம் உடை முழுவதுமாக காற்றில் பறக்கிறது..அவர் உடலை மூடவில்லை...சொல்லலாம் என யோசித்தேன்..அவங்க எப்படி எடுத்துக்குவாங்களோனு யோசிச்சு கடந்து வந்திட்டேன்.. 0 இராஜகுளம் கட்டிங்கல திரும்பி வந்துகொண்டிருக்கும்போது எனது வண்டியை பின்தொடர்ந்து ஒரு வண்டி வந்துகொண்டிருப்பதை எனது ரியர்வியூ மிரர் மூலமாக பார்த்தேன் . இது வழக்கமான ஒன்றுதான்.ஏனென்றால் கிட்டத்தட்ட 3.5 கிமீ ஆளரமில்லாத இரண்டு பக்கமும் ஏரிகளுக்கு நடுவில்தான் அந்த பாதையே இருக்கும். அதனால் பல பேர் தனியா வர பயந்து ஏதோ ஒரு வண்டி வந்தா அதுகூடவே வருவாங்க.எனக்கு இது பலமுறை அனுபவம்... அந்த ரோடில் எப்பவும் டிராபிக் இல்லாததால நான் வண்டியை வேகமாக ஓட்டுவேன்..நடுவில ஒரு பள்ளம் இருக்கும்..வழக்கம்போல அங்க பிரேக் அடிக்கும்போது சார்..சார் என ஒரு பெண் குரல் .....திரும்பி பார்த்தா ஏ...

என் ஆசைக்கு உன் மனைவி வேண்டும்

அனபாயன் சோழன் ஆட்சிக் காலம்.  காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு உழவன். சிவனடியார் அவனிடம் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவான்.  0 சிவன் தன் அடியவர்களைச் சோதனை செய்வது வழக்கம். சிவனடியார் கோலத்தில் இந்த உழவர் இல்லத்துக்கு வந்தார். 0 "எதைக் கேட்டாலும் கொடுக்கிறீர் என்று அறிந்து என் ஆசையைத் தீர்த்துக்கொள்ள உன்னிடம் வந்தேன்"  "கேளுங்கள் சாமி" "என் ஆசைக்கு உன் மனைவி வேண்டும்" "என்னிடம் இருப்பதைக் கேட்டீர்கள். தருகிறேன் சாமி"  0 உழவர் தன் மனைவியை அழைத்தார். அவள் கணவன் சொல்லைத் தட்டாதவன்.  "இன்று உன்னை இவருக்குக் கொடுத்துவிட்டடேன்" மனைவி வியந்தாள். தயங்கினாள். கணவனை வணங்கினாள். பின் அடியாரை வணங்கினாள்.  "இந்த ஊரைத் தாண்டி நாங்கள் செல்லும் வரையில் எங்களுக்குத் துணையாக நீ வரவேண்டும்" "ஆகட்டும் சாமி"  0 உழவர் அவர்களுக்குப் பாதுகாப்பாக அவர்களின் பின்னே சென்றார்.  செய்தி உற்றார் உறவினர்களுக்கும் ஊருக்கும் தெரிந்துவிட்டது.  அனைவரும் திரண்டு வந்தனர். உழவருக்கு அறிவுரை கூறித் தடுத்தனர். உழவர் கேட்கவில்லை. உழவனை அடித்தனர். பொறுத்துக்கொண்டா...

என்னைத் தொடாதே

என்னைத் தொடாதே என்று என் மனைவி கூறுகிறாள்.   இனிமேல் சிவனே என்று இருந்துவிடுகிறேன்.  சிதம்பரத்தில் வாழ்ந்த அந்தக் குயவன் இப்படித் தீர்மானித்தான். ஏன் அவள் இப்படிச் சொன்னாள் நான் இன்னொருத்தியோடு இருந்தது தப்புதான். இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன் என்று கெஞ்சுகிறேன். அவள் கேட்கவில்லை. சரி போகட்டும், ஆறப்போட்டால் எல்லாம் சரியாய்விடும் என்று எண்ணினேன். "திருநீலகண்டம்" என்று அவள் சாமி பெயரைச் சொல்லி சத்தியம் செய்து தொடக்கூடாது என்று சொல்லிவிட்டாளே.   குயவன் தன்னை நொந்துகொண்டான்.  0 மனைவி கணவனைத் தொடாமல் கணவனுக்கு வேண்டிய பணிவிடை அனைத்தையும் செய்துவந்தார். தங்களுக்குள் உடல் உறவு இல்லாமை அயலாருக்குத் தெரியாவண்ணம் இருவரும் வாழ்ந்துவந்தனர். இளமையிலிருந்தே இப்படி வாழ்ந்தவர்கள் முதுமையும் அடைந்தனர். என்றாலும் சிவன்பால் கொண்ட அன்பு குறையாமல் வாழ்ந்துவந்தனர். 0 இருவரும் சிவனிடம் கொண்டிருந்த அன்பினை விளக்கும் வகையில், சிவன் யோகி வடிவம் தாங்கி அவர்களிடம் வந்தார். கோவணம் கட்டிக்கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு பூணூல் அணிந்துகொண்டு வந்தார். சிவன் தன் செஞ்சடையை மறைத்துப் பம்பைத்...

பொண்டாட்டி மேல் அவ்வளவு பாசமா

 இரண்டு திருடர்கள் பகலில் ஒரு வீட்டில் திருட சென்றார்கள்! அந்த வீட்டில் இருந்த பெண்ணை கட்டி போட்டு விட்டு! வீட்டில் இருக்கும் பணம் நகை எல்லாம் எங்கே இருக்கு என்று கேட்டு மிரட்டி கொண்டு இருந்தார்கள்! அப்போது பாத்ரூம்ல குளித்து கொண்டு இருந்த ஆண் வெளியே வந்து திருடர்களை பார்த்து பயந்து! எப்பா! வீட்டில் இருக்கும் எல்லா நகை, பணத்தையும் கொடுத்து விடுகிறேன்! முதல்ல கட்டி போட்டு இருக்கும் பெண்ணை அவிழ்த்து விடுங்கள் என்று கெஞ்சினான்! அதில் ஒரு திருடன்! என்னப்பா உன் பெண்டாட்டி மேல் அவ்வளவு பாசமா! என்று கேட்க ! அதற்கு அந்த ஆள் ! ஆமா சார் ரொம்ப பாசம் கூடவே என் உயிர் மேல் பயம்! கடைக்கு போய் இருக்கும் என் மனைவி எப்ப வேண்டும் என்றாலும் திரும்பி வந்துடுவாங்க அதான் அவர்களை முதலில் அவிழ்த்து விடுங்க ! அவங்க போகட்டும் என்றானாம்!

காரில் போனார்கள்

ஒரு காரில், தாய், மனைவியுடன், ஒருவன் பயணம் செய்து கொண்டு இருந்தான். பின்னாடியே ஒரு போலீஸ் ஜீப் அந்த காரை பின் தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில், போலீஸ் ஜீப், காரை முந்தி மறிப்பது போல் நின்றது. அதில் இருந்து இறங்கிய, போக்குவரத்து துறை உயர் அதிகாரி, காரில் இருந்து, அந்த மனிதனை இறங்குமாறு பணித்தார். அவனும் இறங்கி வரவே, வாழ்த்துக்கள் sir! நானும் உங்கள் வண்டியை, விடாமல் அரை மணி நேரமாக ஃபாலோ செய்கிறேன். நிதானமாக, போக்கு வரத்து விதிகளை மீறாமல், கவனமாக வண்டி ஓ ட்டினீர்கள்! அதை பாராட்டி, உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் க்கான செக் ! என்று எடுத்து நீட்டினார் காரை ஒட்டியவர் குஷியாகி, சொந்த கார் வாங்க வேண்டும்! என்ற என் கனவு நினைவாக போகிறது என்றான். உடனே அவன் மனைவி, அது மப்புல கண்டபடி உளறும் ! நீங்க கண்டுக்காதீங்க என்றாள். காது கேட்காத அவன் தாய், அடுத்தவங்க வண்டிய திருடாதேன்னு அப்பவே சொன்னேன். கேட்டியா? இப்ப பாரு போலீஸ் கிட்ட மாட்டிகிட்ட ! என்றாள்.

இதுக்குதான் ஃபோன்

  அலுவலகத்தில் இருக்கும் கணவனுக்கு மெஸேஜ் அனுப்பினார் அவர் மனைவி மனைவி : என்னங்க , வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வாங்க, அப்படியே சுகன்யா உங்களுக்கு ஹாய் சொல்ல சொல்றா... ( இது மனைவியின் மெசேஜ்) கணவன் : யாரு சுகன்யா , எனக்கு ஹாய் சொல்ல சொல்றது.. மனைவி : அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, நீங்க மெஸேஜ் படிச்சிட்டீங்களான்னு கன்பார்ம் பண்றதுக்காகத்தான் அப்படி நான் போட்டு அனுப்பிச்சேன்... இதுக்கு மேல தான் ட்விஸ்ட்டே... கணவன் : இல்ல, நான் இங்க சுகன்யா கூடத்தான் இருக்கேன் , நீ எந்த சுகன்யாவை சொல்றேன்னு தெரியல , அதான் கேட்டேன்... மனைவி : இப்போ நீங்க எங்க இருக்கீங்க??? கணவன் : காய் கறி கடையில... மனைவி : அங்கேயே இருங்க 10 நிமிஷத்துல வர்றேன்... கணவன் : சரி சீக்கிரம் வா... 10 நிமிஷத்துல வர்றேன்னு சொன்ன மனைவி 5 நிமிஷத்துல காய்கறி கடைகிட்ட வந்து திரும்பி கணவனுக்கு கால் பண்றாங்க... மனைவி : எங்க இருக்கீங்க?? கணவன் : நீ எங்க இருக்க?? மனைவி : காய்கறி கடையில... நீங்களும் அவளும் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க மொதல்ல... கணவன் : நான் இன்னமும் ஆபீஸ் ல தான் இருக்கேன் செல்லம்.. நீதான் காய்கறி கடைக்கு ...

விட்டுக் கொடுக்க முடியுமா

  வீட்டிலேயே தனிமை *பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!* *வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...* *இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...* *இங்குதான் என் மகள் படிப்பாள்...* *இங்குதான் விளையாடுவாள்...* *என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...* *என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....* *என்ன சமைப்பது?...* *என்ன சாப்பிடுவது?...* *அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..* *பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...* *தனிமை... வெறுமை...* *அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...* *பயணம் ஒரு கொடுமை...* *லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...* *சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...* *ஓலாவும், ஊபரும்...* நமக்கு தேவைப்படும் நேரத்தில், *பீக் hour சார்ஜ்* போட்டு களைப்படைய செய்கின்றனர்... *நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....* இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்...

மனைவியின் பிரசவ வலி

 ஐடா கதவை திறக்கிறார் 1884 ஆண்டு நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!! அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..! ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..! ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார். "இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... ...

காடு, தோட்டம் இருக்குற மாப்ள வேணும்

 பொண்ணுக்கு டீ, காப்பி போடத் தெரியுமா..? ~ தெரியாதுங்க.. * உங்க பொண்ணுக்கு மாடு மேய்க்கத் தெரியுமா..? ~ தெரியாதுங்க.. *காட்டுல களை எடுக்கவாவது உங்க பொண்ணுக்கு தெரியுமா..? ~ தெரியாதுங்க.. * நடவு நடத்தெரியுமா உங்க பொண்ணுக்கு..? ~ அதெல்லாம் தெரியாதுங்க.. * மாட்டைப் பிடிச்சு கட்டத் தெரியுமா..? ~ தெ..தெரியாதுங்க.. * தக்காளிச் செடியையாவது கட்டத் தெரியுமா..? ~ அதுவும் தெரியாதுங்க.. * சரி, பரவால்ல. உங்க பொண்ணுக்கு விவசாயம் பண்ற மாப்பிள்ளைய புடிக்குமா..? ~ சே..சே.. சுத்தமா புடிக்காதுங்க.. * அப்புறம், என்ன வெங்காயத்துக்கு காடு, தோட்டம் இருக்குற மாப்ள வேணும்னு கேட்கறிங்க..???😣 நாட்டில் நடக்குற உண்மை சம்பவம்.... படித்ததில் பகிர்ந்து கொண்டேன்🤝🤷‍♂️ இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்.... முப்பது வயசுல இது வேணும்னு தோணும்.... நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்.... ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூட பரவாயில்லைனு தோணும்..... அறுபது வயசுல எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்.... எழுபது வயசுல எதுவும் வேணாம்னு தோணும்....!!!!!!! காலமாற்றம்.... காலச்சுழற்சி... கால நேரம்....!!!!! பிடிவாதம் எல்லாம் முடக...

மூக்கை அறுத்தது

அவள் அரசி மட்டுமன்று அழகியுங்கூட.  அவள் கணவன் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன். பெயர் கழற்சிங்கன் .  கணவனும் மனைவியும் சிவனை வழிபட ஊர் உராகச் சென்றனர். அன்று திருவாரூர் வந்திருந்தனர்.  0 கணவன் மூலவரை வழிபட விரைவாகச் சென்றுவிட்டான். மனைவி கோயிலைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு மெதுவாகச் சென்றாள்.  வழியில் ஒரு மண்டபம். அங்கே சிலர் இறைவனுக்கு மாலை கட்டிக்கொண்டிருந்தனர்.  பூக்களின் மணம் மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது.  0 பெண்களுக்குப் பூவைக் கண்டால் ஆசை. அவள் அங்கிருந்த பூ ஒன்றை எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் .  அவள் தலையில் அணிந்திருந்த முடி (கிரீடம்) அவளை அரசி என்று வெளிச்சம் போட்டுக் காட்டிற்று.  அவள் பூவை மோந்து பார்ப்பதை ஒருவன்  கவனித்தான்.  ஓடோடி வந்தான்.  0 அவள் கூந்தலைப் பிடித்துக் கீழே தள்ளினான். தன் வாளை உருவினான். அவள் மூக்கை அறுத்து எறிந்தான் .  அறுத்தவன் செருத்துணையார் . போரில் அரசனுக்குத் துணைநிற்பவன்.  அவள் கதறினாள்.  0 கணவனுக்குச் செய்தி போயிற்று.   அவன் அரசன் கழற்சிங்க...

தலைகீழாகத் தொங்கினாள்

குழந்தை பிறக்கும் நேரம் வந்தது. தாய் சோழநாட்டு அரசி. பெயர் கமலவதி .  நேரம் கணித்துச் சொல்லும் சோதிடன் ஒருவன் வந்தான்.  குழந்தை ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் மூவுலகையும் ஆளும் பேறு பெறுவான் என்று கூறினான்.  என்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுங்கள். ஒரு நாழிகை கழித்துப் பெற்றுக்கொள்கிறேன் - என்றாள்.  தந்தை சோழ அரசன். பெயர் சுபதேவன் . உறையூரில் இருந்துகொண்டு நாட்டை ஆண்டுவந்தான்.  அரசியின் விருப்பத்தை நிறைவேற்றினான்.  ஒரு நாளிகை நேரம் கழிந்தது. கணியன் நேரம் பற்றிச் சொன்னான். தாய் தன்னை இறக்கி விடுமாறு கூறினாள். குழந்தையைப் பெற்றெடுத்தாள்.  குழந்தையைச் " கோச்செங்கண்ணனோ " என்று அழைத்தாள். இறந்துவிட்டாள்.  தந்தை குந்தையை வளர்த்தான்.  அரசன் ஆக்கினான் அரசன் செங்கணான் சிவனுக்குக் கோயில்கள் பல கட்டினான்.  இவன் முன் பிறவியில் திருவானைக்கா சிவன் இருந்த நாவல் மரத்தடியில் சிலந்திப் பூச்சியாக இருந்து சிலந்தி வலையால் அந்தச் சிவனுக்குக் கோயில் கட்டியவன்.  பார்க்க 1    

யானைக்கும் சிலம்பிக்கும் சண்டை

சிலம்பிப் பூச்சியை சிலந்திப் பூச்சி என்கின்றனர். யானை எவ்வளவு பெரியது, சிலம்பிப்பூச்சி எவ்வளவு சிறியது என்பது தெரிந்ததுதான்.  ஏன் சண்டை, எதற்காகச் சண்டை, வென்றது எது? 0 திருவானைகாவில் சிவன் கோயில் இருக்கிறது.  ஆதியில் அது நாவல் மரத்தடியில் இருந்தது.  அப்போது சிவனுக்குக் கோயில் கட்டவேண்டும் என்று சிலம்பிப் பூச்சி விரும்பிற்று.  கட்டிற்று.  சிலம்பிப் பூச்சியின் வலையே அந்தக் கோயில்.  சிலம்பியின் பத்தி (பக்தி) இப்படி ஒரு கோயில் ஆயிற்று.  அது சிலந்திக்கூடு கோயில்.  0  யானை ஒன்று அங்கு வந்தது.  சிலந்திக் கூட்டைப் பார்த்தது.  எச்சிலைத் துப்பி வலை பின்னுகிறதே.  சிவனுக்கு அபத்தம் செய்கிறதே என்று சினம் கொண்டது. தன் துதிக்கையால் அந்த வலையைப் பிய்த்து எறிந்தது.  நிம்மதியாகத் திரும்பிச் சென்றுவிட்டது.  இது சிவன்மீது யானை காட்டிய அன்பு.  0  சிலம்பி திரும்பவும் கூடு கட்டிற்று.  மறுநாள் யானை வந்தது.  முதல்நாள் செய்தது போலவே சிலம்பிக் கூட்டைப் பிய்த்து எறிந்துவிட்டுப் போய்விட்டது.  இப்படிச் சில நாட்கள் சண்டை ந...